மதுரையில் முழு பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் சில நாட்கள் பொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதுரையில் கடந்த ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது நல்ல பலனை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் கரோனா தொற்று தீவிரம் இருப்பதால் மேலும் சில நாள்கள் பொது முடக்கத்தை நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாக விளக்கம் அளித்தார்.