தேனியில் கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை(செவ்வாய்கிழமை) முதல் ஜூலை 26-ம் தேதி வரை அனைத்து கடைகள் மற்றும் உணவகங்களை அடைக்க திங்கள்கிழமை, வர்த்தகர் சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.
தேனியில் மாவட்ட வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் தலைவர் என்.எஸ்.கே.நடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வியாபாரிகள் சங்கம், மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஹோட்டல்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.