உத்தமபாளையம் பேரூராட்சியில் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளன.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற வர்த்தகர் சங்க கூட்டத்தில் வருகிற ஜூலை 19 முதல் ஜூலை 26 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதால் மருந்து, காய்கனி, பால், பழம் கடைகளைத் தவிர பிற அனைத்து கடைகளும் அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.