விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் அன்று பிற்பகல் சுமார் 5.15 மணிக்குத் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடியுடன் கன மழையாகத் தொடர்ந்து பெய்து வருகிறது.