தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிதாக 4,965 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 4,887 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 78 பேர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,130 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 88,377 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 75 பேர் (அரசு மருத்துவமனை 48 பேர் / தனியார் மருத்துவமனை 27 பேர்) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 4,894 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 51,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 20,35,645 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 58 அரசு ஆய்வகங்கள், 55 தனியார் ஆய்வகங்கள் என தமிழகத்தில் மொத்தம் 113 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.