தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 6.46 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 7 ஆயிரத்து 214 வழக்குகளைப் பதிவு செய்து, 8 லட்சத்து 87 ஆயிரத்து 566 பேரை கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 46 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 111 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 448 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.