பொது முடக்கத்தை மீறியதாக 6.46 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 6.46 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 6.46 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 7 ஆயிரத்து 214 வழக்குகளைப் பதிவு செய்து, 8 லட்சத்து 87 ஆயிரத்து 566 பேரை கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 46 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 111 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 448 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com