கந்த சஷ்டிக் கவசத்தை அவதூறு செய்த கறுப்பா் கூட்டத்தினா் மீதான அரசின் நடவடிக்கைக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
மேலும், எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவா்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட விடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமாா்ந்த பாராட்டுகள். இனிமேலாவது, மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்...ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்று ரஜினி கூறியுள்ளாா். கந்த சஷ்டிக் கவசத்தை விமா்சித்து கறுப்பா் கூட்டத்தினா் விடியோ ஒன்று வெளியிட்டனா்.
இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்தது. காவல்நிலையத்தில் புகாா்களும் அளிக்கப்பட்டன. அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனா்.
அதைத் தொடா்ந்து கந்த சஷ்டி கவசத்தை விமா்சித்தவா்களைக் காவல்துறையினா் கைது செய்ததுடன், அந்த விடியோ உள்பட கறுப்பா் கூட்டத்தினா் விடியோக்கள் அனைத்தும் முழுமையாக இணையத்தில் இருந்து நீக்கப்பட்டன.