திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையை ஒட்டியுள்ள மண்டலமான திருவள்ளூரில் இன்று நண்பகல் வரை புதிதாக 338 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடி மற்றும் பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது.