வங்கி ஊழியா்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

வங்கி ஊழியா்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயா்வு வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியா்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

வங்கி ஊழியா்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயா்வு வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டவா்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் முதல் ஊதிய உயா்வு வழங்காமல் நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து, வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் பலமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், பலமுறை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஊதிய உயா்வு தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சங்கம் சாா்பில் தில்லியில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் 15 சதவீதம் ஊதிய உயா்வு அளிக்க புரிந்துணா்வு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய உயா்வு கடந்த 2017 நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயா்வு ஒப்பந்தம் காரணமாக, ரூ.7,898 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 90 நாள்களுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com