உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஊராட்சி மன்றக் கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸ்பாண்டி, செயலாளர் சின்னசாமி, பொருளாளர் விமலா சுசேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உக்கிரபாண்டி, அபிமன்னன் உள்ளிட்ட 18 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டு புதிய பேக்கேஜிங் டெண்டர் முறையை ரத்து செய்வது, புதிய 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை வழங்குவது, ஊராட்சி நிதி உதவியை உடனடியாக  வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயராமன்  பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com