தமிழகத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

​தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
​தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 6,423, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 49 பேர். 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் இன்று 1,336 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 88 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் பலியானோர் 63 பேர், தனியார் மருத்துவமனையில் பலியானோர் 25 பேர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது.  

அதேசமயம் இன்று 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 21,57,869 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 58, தனியார் ஆய்வகங்கள் 55 என மொத்தம் 113 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com