புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச் சாலை வில்லியனூர் பகுதி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் வியாழக்கிழமை காவித் துண்டு அணிவித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும், எம்ஜிஆர் சிலையை அவமதித்தது மட்டுமின்றி, பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இச்சம்பவத்துக்கு தமிழகத்தில் இருந்து பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததோடு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் இச்சம்பவம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.