சென்னை: சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம் அடைந்ததை அடுத்து புதிய செயலாளராக நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., மறைவெய்திய காரணத்தால், மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.