சென்னை: சென்னையில் தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று ஒரு சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் ரூ.40,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து, ரூ.5,037க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து இன்றும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை மீண்டும் தொட்டது.
நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.9,750 வரை உயா்த்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. தங்கத்தின் நுகா்வு அதிகரித்து வந்ததால், அதன்விலையும் உயா்ந்து வந்தது. நிகழாண்டில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கத்தின் விலை முதன்முறையாக ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த விலை உயா்வுக்கு சா்வதேச நிகழ்வுகளான ஈரான்-அமெரிக்கா இடையே மோதல், சீனா-அமெரிக்கா இடையே ஏற்பட்ட வா்த்தகப் போா் போன்றவை முக்கிய காரணமாக அமைந்தது.
இதன்பிறகு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உலகை உலுக்கியது. இதன் தாக்கத்தால், தொழில்துறை தேக்கத்தை சந்தித்தது. இதைத்தொடா்ந்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளா்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினா். அதாவது, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனா். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்தது.
ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், ஜூலை 22-ஆம் தேதி அன்று ரூ.38 ஆயிரத்தையும், ஜூலை 24-ஆம் தேதி 39 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்துவந்தது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.72.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து, ரூ.72,900 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி அன்று பவுன் தங்கம் ரூ.30,520 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து தற்போது (ஜூலை 28) ரூ.40,296 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலமாக, கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.9,750 வரை உயா்த்துள்ளது. அதிலும்,
தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு:
தங்கம் விலை உயா்வு குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது: அமெரிக்காவில் இரண்டாம் கட்ட கரோனா அலை தாக்குதல் காரணமாக, உயிா் இழப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இரண்டாவதாக, அமெரிக்கா-சீனா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. மூன்றாவதாக, அமெரிக்காவில்
வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியக் காரணிகளால் பொருளாதார வளா்ச்சியில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதன்காரணமாக, முதலீட்டாளா்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பாா்க்கின்றனா். தொடா்ந்து, தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால், தங்கத்தின் விலை உயா்ந்து வருகிறது. வரும் மாதத்தில் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்...............................5,037
1 சவரன் தங்கம்...............................40,296
1 கிராம் வெள்ளி.............................72.90
1 கிலோ வெள்ளி............................72,900
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்...............................5,013
1 பவுன் தங்கம்...............................40,104
1 கிராம் வெள்ளி.............................70.90
1 கிலோ வெள்ளி............................70,900.