கந்த சஷ்டி கவச விவகாரம்: மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் 'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனலைச் சேர்ந்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
செந்தில்வாசன்
செந்தில்வாசன்

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் 'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனலைச் சேர்ந்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கந்த சஷ்டி கவசம் குறித்து யூடியூப் சேனலில் அண்மையில் சா்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டன. இதற்கு முருக பக்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடர்பாக 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 'கறுப்பர் கூட்டம்' அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டன.

இந்த நிலையில், கந்த சஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com