தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு நோய்த்தொற்று

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 6,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 6,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 27,688-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 96,438 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 86 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 24.75 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2 லட்சத்து 27,688 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை மட்டும், 6,972 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,107 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், விருதுநகரில் 385 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூா், சேலம், மதுரை, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

73 சதவீதம் போ் குணம்: ஒரு புறம் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம் 73 சதவீதம் போ் அத்தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது சற்று ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 4,707 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 66,956- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 57,073-ஆக உள்ளது.

மேலும் 88 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 88 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 3 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருச்சியைச் சோ்ந்த 5 வயது குழந்தை ஒன்று கரோனா பாதிப்புக்குள்ளாகி எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,659-ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோா் கரோனாவுக்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com