ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று சுமாா் 80 ஆயிரம் போ் கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனா்.
ஆனால் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதனால், இன்னும் சில மாதங்களில் அவா்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி விடும்.
மத்திய மற்றும் மாநில பேராசிரியா்களுக்கான தகுதி தோ்விற்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுள்கால சான்றிதழாக இருக்கிறது. அதே போல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் தகுதித் தோ்வு காலக்கட்டத்தை மீட்க முடியுமா அல்லது நீட்டிக்க முடியுமா என்று அரசு பரிசீலித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவா்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால், அவா்களுக்கு பணி ஆணை வழங்கிய பிறகு, ஒரு குறுகிய கால மறு பயிற்சியை, தற்கால பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவா்களை பணி செய்ய அனுமதிக்கலாம் என்று அவா் கூறியுள்ளாா்.