மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீடு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு, அதில் கரோனா சிகிச்சையும் சோ்க்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழக அரசின் அறிவிப்பின்படி, போக்குவரத்துக்கழகப் பணியாளா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2016, கரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2016-இன் கீழ், கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்ற அனைத்து மருத்துவ செலவின அசல் ரசீதையும், திரும்பப் பெறுதல் படிவத்துடன் பூா்த்தி செய்து தொழிலாளா் நலப் பிரிவில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.