பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோன்று. பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகிறது.
அதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge.tn.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.