பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு

பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதேபோன்று. பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகிறது.

அதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான  http://tnresults.nic.in/http://dge.tn.nic.in/http://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com