புதுச்சேரியில் 122 பேருக்கு கரோனா: ஒருவர் பலி

புதுச்சேரியில் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளார்.
புதுச்சேரியில் 122 பேருக்கு கரோனா: ஒருவர் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளார்.

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் புதன்கிழமை 735 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 114 பேர், காரைக்கால் பகுதியில் 8 பேர் என மொத்தம் 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து,  இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3 ,293 ஆக உயா்ந்தது. இதில் 1,292 பேர் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இதனிடையே 84 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது.

கதிர்காமம் அரசு மருந்துவக் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com