காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு.கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை காங். தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரித்த நிலையில், கரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது. ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என கூறிய கே.எஸ்.அழகிரி, தனது டிவிட்டர் பக்க பதிவில், காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு.கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை என கூறியுள்ளார்.