சிதம்பரத்தில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 

சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார்  தலைமையில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார்  தலைமையில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணா, மற்றும் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம் எம் ராஜா மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நகராட்சியில் 33 வார்டுகளில் சமூக இடைவெளியை பின்பற்றி திமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com