சென்னை: கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ‘கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயனம் மற்றும் கூஷ்மாண்ட ரசாயனம் மருந்துகளை வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்த மருந்துகளை அரசு சிகிச்சை மையங்களில் கட்டணம் இன்றி பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.