சென்னை: தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாகவும்’ தெரிவித்துள்ளது