கோவையில் அமைச்சர், காவல்துறையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர்..
கோவையில் அமைச்சர், காவல்துறையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறை கைது செய்தனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில், திமுக நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், திமுக மாவட்டச் செயலாளர்கள் வியாழக்கிழமை அறிவித்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில், சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதேபோல், திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையிலும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சரைக் கண்டித்தும், காவல்துறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத்தின் புறநகரப் பகுதிகளான பொள்ளாச்சி, சூலூர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதால், நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோரைப் காவல்துறை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com