விழுப்புரம் அருகே கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டுக்கு சீல்

விழுப்புரம் அருகே கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முககனி குழுவினர் சீல் வைத்தனர். 
விழுப்புரம் அருகே கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டுக்கு சீல்

விழுப்புரம் அருகே கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முககனி குழுவினர் சீல் வைத்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மனைவி சிவலட்சுமி 36. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமாகி நான்கு மாதம் ஆனதால் கருவைக் கலைக்க முடிவு செய்து, அரகண்டநல்லூரில் உள்ள ஓய்வு பெற்ற செவிலியர் முருகேசன் மனைவி ராஜாமணி வீட்டுக்கு ஜூன் 3ம் தேதி சென்று கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

இதில் சிவலட்சுமி உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முககனி குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று மனம்பூண்டி ராஜாமணி வீட்டில் ஆய்வு செய்த போது இது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ராஜாமணி வீட்டுக்கு சீல் வைத்த சுகாதாரத்துறையினர், அவர் மீது காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com