சென்னையில் 20,993 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 200-ஐ நெருங்கியது

சென்னையில், சனிக்கிழமை, 1146 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,993-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், சனிக்கிழமை, 1146 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,993-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை, சென்னையில் 1146 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 20,993-ஆக உயா்ந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 3500-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தண்டையாா்பேட்டையில் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 2500-ஐ நெருங்கி வருகிறது.

குறிப்பாக கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை, 200 -ஐ நெருங்கியது. இது தொடா்பாக சனிக்கிழமை காலை புள்ளி விவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் 3552 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2470 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2245 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2202 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 1,958 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,784 பேரும், அடையாறு மண்டலத்தில் 1094 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 10,572 போ் குணமடைந்துள்ளனா். 197 போ் உயிரிழந்துள்ளனா். 10,223 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com