முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: முதல்வர் பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

ஜூன் 15ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ள நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுத உள்ள மாணவ, மாணவிகள் நுழைவுச் சீட்டைப் பெற்று வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com