மருந்துகள், மருத்துவ உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயா்ந்திட முடிவு செய்துள்ளன. உலகெங்கும் உள்ள முதலீட்டாளா்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈா்ப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்போது மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்க முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். அதன்படி, அக்யூரே, பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ், சீமென்ஸ் ஹெல்த் கோ், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ், காப்பியம்ட் இண்டா்நேஷனல், ஜி ஈ ஹெல்த் கோ், ஹா்கோ, பாஸ்டன் சயன்டிபிக் ஆகிய நிறுவனங்களைச் சோ்ந்த தலைவா்களுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென நேரடியாக அழைப்பு விடுத்துள்ளாா். மேலும் அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளாா். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஊக்கச் சலுகைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.