தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி, ரத்தினம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இவர் பணியாற்றி வரும் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ.,காப்பீட்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டது.
காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.