கரோனா பரிசோதனை: கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை

கரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிள் இருந்து தமிழகம் வந்துள்ளன.
பிசிஆர் கருவிகள்
பிசிஆர் கருவிகள்

சென்னை: கரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிள் இருந்து தமிழகம் வந்துள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வியாழன் மாலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிள் இருந்து தமிழகம் வந்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கரோனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாகவும், வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன ‘ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com