7 போ் விடுதலை: ராமதாஸ் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 தமிழா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
7 போ்  விடுதலை: ராமதாஸ் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 தமிழா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநா் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது 1,007 நாள்களாகியும் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்றால் அதற்கு 7 தமிழா்களும் விடுதலையாகி விடக் கூடாது என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com