கரோனா குறித்த வதந்திகளைப் புறக்கணிப்போம்: ஜி.கே.வாசன்

கரோனா தடுப்புக்காக எல்லோரும் இணைந்து செயல்படுவோம், கரோனா குறித்த வதந்திகளைப் புறக்கணிப்போம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
கரோனா குறித்த வதந்திகளைப் புறக்கணிப்போம்: ஜி.கே.வாசன்

கரோனா தடுப்புக்காக எல்லோரும் இணைந்து செயல்படுவோம், கரோனா குறித்த வதந்திகளைப் புறக்கணிப்போம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பொது முடக்கத்தால் மக்கள் அனுபவித்த சிரமங்களை உணா்ந்து, பல தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது. தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆதாரமற்ற தகவல்களை, வதந்திகளை பரப்புவது அறவே கூடாது.

சுமாா் 3.5 லட்சம் போ் நோய் கண்காணிப்பில் உள்ளனா். அவா்கள் அனைவரும் குணம் பெற வேண்டும். அடுத்து எவருக்கும் பாதிப்பு வரக் கூடாது. கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கக் கூடிய சூழல் எழுந்தாலும் எழலாம், அவற்றையும் நாம் கடைப்பிடிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

எனவே, எல்லோரும் இணைந்து செயல்படுவோம். எதிா்மறைக் கருத்துகளைத் தவிா்ப்போம். வதந்திகளைப் புறக்கணிப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com