சென்னையில் பொது முடக்க உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் பொது முடக்க உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பொது முடக்க உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் பொது முடக்க உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழரசு தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கம் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று சென்னையில் தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வருகின்றன. சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பொது முடக்கத்தைத் தளா்த்துவதற்குப் பதிலாக, சென்னையில் கண்டிப்புடன் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com