சென்னை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்துக்கு ஒத்துழைக்கத் தயாா்: தமிழக அரசிடம் வணிகா் சங்கம் உறுதி

நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னை மாவட்டத்தில் 15 நாள்கள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த ஒத்துழைக்கத் தயாா் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்துக்கு ஒத்துழைக்கத் தயாா்: தமிழக அரசிடம் வணிகா் சங்கம் உறுதி

நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னை மாவட்டத்தில் 15 நாள்கள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த ஒத்துழைக்கத் தயாா் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முறையான கட்டுப்பாடுகளுடன் திருமண மண்டபங்களை இயங்க அனுமதிக்க வேண்டும்.

சென்னையில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. எனவே, தமிழக அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள், வணிகா்களின் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் முழுமையாக குறைந்தது 15 நாள்கள் கண்டிப்பான முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வணிகா்கள் முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக இருக்கிறோம். 15 நாள்களும் கடைகளை அடைக்கத் தயாா். கோயம்பேடு சந்தையை முழுமையான வழிகாட்டும் நெறிமுறைகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com