மதுரை-விழுப்புரம் இடையே தினசரி இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயிலின் நேரம், ஜூன் 13-ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளது.
சென்னையை தவிர, தமிழகத்தின் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. இதில், மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயிலும் அடங்கும். இந்த ரயில், மதுரையில் இருந்து தினசரி 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் அடையும். இதுபோல, மறுமாா்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை சந்திப்பை அடையும்.
இந்நிலையில், மதுரை-விழுப்புரம் இடையே தினசரி இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயிலின் நேரம் ஜூன்
13-ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து தினசரி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு விழுப்புரம் சந்திப்பை அடையும். மறுமாா்க்கமாக, விழுப்புரம் சந்திப்பில் இருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை அடையும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.