இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்
இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 70 மி.மீ., வேலூா் மாவட்டம் ஆம்பூா், நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் தலா 40 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதுதவிர, கிழக்கு அரபிக்கடல் மற்றும் கா்நாடகம், தெற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்

பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com