தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டமும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.