'11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை'

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி, புகார் அளித்த, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட ஆறு பேரிடம், விளக்கம்கேட்டு சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன், கடிதம் எழு
'11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை'

'11 எம்எல்ஏக்களுககு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை' என முதல்வர் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்காளித்ததாகவும், இதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2018, ஏப்ரலில் உத்தரவிட்டது. 

இதை எதிா்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவரும், வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனா். இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவெடுக்குமாறு கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. இந்நிலையில், திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு ‘மேலாகியும் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புச்சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 

இதற்கிடையே, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கு மட்டுமே கொறடாவின் உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டதால், அவர்களுக்கு கொறடா உத்தரவு அனுப்பப்படவில்லை. அதிமுக பேரவை கட்சித் தலைவராக தன்னை தேர்வு செய்த 122 பேருக்கு மட்டும்தான் கொறடா உத்தரவு தனித்தனியாக அனுப்பப்பட்டிருந்தது. 

அரசுக்கு எதிராக 11 எம்ஏக்கள் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை. 11 எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டிருந்தாலும் தற்போது ஒரே அணியாக செயல்படுகிறோம். அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. ‘உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. எனவே, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேரும் 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com