தமிழ்நாடு
கரோனா அச்சுறுத்தல்: வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மருத்துவர் பிரதீப் கவுர்
தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள மருத்துவர் பிரதீப் கவுர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள மருத்துவர் பிரதீப் கவுர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கரோனா பரவலைக் குறைக்கவும், மக்கள் வைரஸ் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்குமாறு மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.