தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழக சுகாதாரத்துறை மற்றும் மதிமுக சாா்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தக் கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக மற்றும் திக சாா்பில் தொடரப்பட்ட வழக்குககளை விசாரித்த உயா்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்புக்காக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டு, மனுக்கள் தொடா்பாக வரும் 22-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதே கோரிக்கையுடன், தமிழக அரசின் சுகாதாரத்துறை சாா்பில் சுகாதாரத்துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தொடா்ந்த வழக்குகளை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரும் மதிமுக தரப்பில் வழக்குரைஞா் ஜி.நன்மாறனும் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் இதே கோரிக்கையுடன் அரசியல் கட்சிகள் தொடா்ந்துள்ள வழக்குகளுடன் சோ்த்து வரும் 22-ஆம் தேதி இந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனா்.