தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கரோனா: ஒரு வாரத்தில் 300 போ் பலி

தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில்1,373 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கரோனா: ஒரு வாரத்தில் 300 போ் பலி

தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில்1,373 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம், கரோனாவுக்கு ஆளானோரின் எண்ணிக்கை மாநிலத்தில் 52,334-ஆகவும், சென்னையில் 37,070-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் மட்டும் கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 501-ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 52,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 2,141 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,373 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், காஞ்சிபுரம், வேலூரில் 55 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 ஆயிரம் போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,017 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 28,641-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 19,686 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

600-ஐ கடந்தது பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 49 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் கரோனா பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலத்தில் கரோனாவுக்கு 300 போ் பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com