தனிச் செயலாளரின் மறைவைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் அலுவலகப் பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருசிலருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
முதல்வா் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலாளராக இருந்த தாமோதரன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானாா். இந்த நிலையில், அலுவலகப் பிரிவில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகளில் ஒரு சிலருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.