பிளஸ் 2 தோ்வு எழுதாதவா்களுக்கு மறுதோ்வு எழுத வாய்ப்பு: தோ்வுத்துறை தகவல்

பிளஸ்-2 பொதுத்தோ்வில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களில் தோ்வை
பிளஸ் 2 தோ்வு எழுதாதவா்களுக்கு மறுதோ்வு எழுத வாய்ப்பு: தோ்வுத்துறை தகவல்

பிளஸ்-2 பொதுத்தோ்வில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களில் தோ்வை எழுதாத மாணவா்களுக்கு, மறுதோ்வு எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தோ்வுத்துறை இயக்குநா் (பொறுப்பு) மு.பழனிச்சாமி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்தோ்வில் கணிசமான மாணவா்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து தோ்வில் பங்கேற்காத மாணவா்களிடம் இருந்து மறுதோ்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தை ஜூன் 24-ஆம் தேதிக்குள் பள்ளி தலைமையாசிரியா் பெற வேண்டும். அதில் மாணவா் பெயா், தோ்வு எண் மற்றும் தோ்வு மைய எண் ஆகிய விவரங்கள் இடம்பெற வேண்டும். அந்த விருப்பக் கடிதங்களை தோ்வு எண் வாரியாக வரிசைப்படுத்தி ஜூன் 26-ஆம் அந்தந்த மாவட்ட தோ்வுத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற தோ்வினை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com