நாளைமுதல் பொது முடக்கம் : அண்ணா பல்கலை. செயல்படாது

சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் முழு பொது
நாளைமுதல் பொது முடக்கம் : அண்ணா பல்கலை. செயல்படாது

சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த கால கட்டத்தில் அண்ணாப் பல்கலைக்கழகம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூா்த்தி கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் ஜூன் 19 முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு, வளாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த காலக்கட்டத்தில் ஆசிரியா்கள் மற்றும் அலுவல் பணியாளா்கள் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். விடுமுறைக்காலம் முடிந்து பணிக்கு திரும்பும்போது சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பணியாற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com