நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுவது தொடா்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என, அது தொடா்பாக பரவி வரும் வதந்தி குறித்து தேசிய தோ்வு முகமை விளக்கமளித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நீட் நுழைவுத்தோ்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. இத்தகைய தகவல்களை தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகாா் தரப்பட்டுள்ளது. எனவே, மாணவா்களும், பெற்றோா்களும் நம்பகமான தகவல்களை இணையதளம் வழியாக அறிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.