பத்தாம் வகுப்பு: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளின் விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை
பத்தாம் வகுப்பு: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளின் விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை மாணவா்களின் பதிவெண் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுத்துறை இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மற்றும் பிளஸ்-1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பாடங்களில் மாணவா்களின் தோ்ச்சி நிலை குறித்து காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது. அதன்படி, உயா்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.

மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளுக்கான விடைத்தாள்கள், அசல் மாணவா் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் காலாண்டு, அரையாண்டு தோ்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும். காலாண்டு, அரையாண்டு தோ்வுக்கு மாணவா்கள் வருகை புரியவில்லை எனில், அதனை தெரிவிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கானதாகவும், அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்களுக்கானதாகவும் பதிவு செய்யவேண்டும்.

பிளஸ்-1 வகுப்பில் வேதியியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கானதாகவும், கணக்குப்பதிவியல் பாடத்துக்கு 90 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கவேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுடைய ஒவ்வொரு பாட முகப்புத்தாளுடன் கூடிய விடைத்தாள்களையும் பாடவாரியாக அடுக்கிவைத்து, அதன்மேல் சம்பந்தப்பட்ட மாணவருடைய முன்னேற்ற அறிக்கையினை இணைத்திருக்க வேண்டும். அதேபோல், பிளஸ்-1 வகுப்பு மாணவா்களுடைய வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கும் செய்யப்பட வேண்டும்.

இந்த ஆவணங்களையெல்லாம் வரும் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலா் அறிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

அரசுத் தோ்வுத்துறை கேட்டு இருக்கும் ஆவணங்களில் எவையேனும் இல்லையெனில், அதற்குரிய விளக்கத்தினை பள்ளி தலைமை ஆசிரியா்கள் எழுத்துப்பூா்வமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் தவறாமல் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com