மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை கூவம் ஆற்றில் நேப்பியார் பாலம் அருகே 65 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் இன்று கரை ஒதுங்கியது. அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், ஓரிரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி  என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கூவம் ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com