திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,237ஐ எட்டியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,237ஐ எட்டியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பூவிருந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,011 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 82 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,237 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com