ராகுல்காந்தி பிறந்த நாள் விழா: ஊத்தங்கரையில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்று வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ராகுல்காந்தியின் 50-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஊத்தங்கரையில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்று வழங்கப்பட்டது. 
ராகுல்காந்தி பிறந்த நாள் விழா: ஊத்தங்கரையில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்று வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ராகுல்காந்தியின் 50-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஊத்தங்கரையில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்று வழங்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்வும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் அவர்களின் அறிவுரைப்படி இன்று விவசாயிகள் தினமாக அறிவித்து பொதுமக்களுக்கு இலவசமாக பல்வேறு வகையான தென்னை மரக் கன்றுகள், செடிகளை முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் வட்டார தலைவருமான ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டார தலைவர் ரவி,நகரத் தலைவர் விஜிகுமார்,ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமச்சந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, பொருளாளர் திருமால், ஒப்பந்ததாரர் சின்னதம்பி,சிங்கார பேட்டை முன்னாள் துணைத் தலைவர் மணி,நாகராஜ்,சொக்கலிங்கம்,எஷ்,ராமு,மகேந்திரன், சி.கோவிந்தன்,குப்புசாமி,அண்ணாதுரை, பூக்கடை  மகி, கோவிந்தசாமி, ராமமூர்த்தி, ராஜேந்திரன், எம்எஸ்,கிருஷ்ணன், பொன்னன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக நான்குமுனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்  பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இதில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com